தம்பி அந்த மாடிக்கு போகதே!!!

மது!!! வீட்டையும், நாட்டையும் கெடுக்கும் என்ற வைர வரிகளை உறுதி செய்யும் வகையில் புதுத்தெரு முட்டை கடைக்கு அருகாமையில் இருக்கும் அந்த மாடியில் நமது ஊர் இளைஞர்கர்களைக் குடிக்கு அடிமையாக்கி வரும் சில இளைஞர்களைப் பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்.!!!

நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் இந்த சைத்தான்களின் வலையில் 'நல்ல' வீட்டு பிள்ளைகள் கூட தப்பவில்லை, இம்மாடி வாழ் ரவுடிகளின் சில சாதனைகள் 'அம்மாடியோவ்' என்று சொல்லும் அளவுக்கு விரிகிறது

பல இன்னல்களுக்கு பிறகு வெளிநாட்டுக்கு தன் தம்பியை எடுத்து நல்ல வேலையில் சேர்த்து கல்யாணம் செய்து தன் கடமை முடிந்தது என்று பெருமூச்சு விடுவதற்குமுன் விடுமுறையில் ஊர் வந்த அவர் தம்பியை குடிக்கு அடிமையாக்கிய இந்த மாடி வாழ் ரவுடிகளின் அட்டூழித்தை ஆவேசமாக என்னிடம் கூறினார் பாதிப்புக்குள்ளான அந்த சகோதரரின் காக்கா (அண்ணன்).

பன்ருட்டியில் கிடைக்கும் ஒரு பெரிய பழத்தின் பெயரால் அழைக்கபடும் வேறொரு இளைஞனை குடிக்கு அடிமையாக்கி அவனின் இன்றைய பரிதாப நிலைக்கு இம்மாடிவாசிகளே காரணம் என்று கூறபடுகிறது. இன்னும் பெயர் கூற விரும்பாத பல நல்ல குடும்ப இளைஞர்களையும் இம்மாடியில் குடிக்கு அடிமையாக்கபடுகிறார்கள்.

ஊரில் இருக்கும் இளைஞர்களுக்கும், வெளிநாட்டியிருந்து வரும் இளைஞர்களுக்கும் அத்தெருவில் வசிக்கும் நல்ல உள்ளங்களால் எச்சரிக்கை மணி அடிக்கபடுகிறது. "தம்பி அந்த மாடிக்கு போகாதே" என்று..!வெளிநாட்டிலிருந்து இந்த சைத்தான்களின் குடும்பத்தாரால் அனுப்படும் பணத்தில் பந்தா,பகட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த ரவுடிகளின் ஆசை வார்த்தைகளால் "விளக்கில்பட்டு அழியும் விட்டில்பூச்சிகள் போல்" தன்னையே அழித்து கொள்ளும் அப்பாவி இளைஞர்களைக் காப்பாற்ற ஜமாத்தார்கள், த.த.ஜ, த.மு.மு.க போன்ற இயக்கங்கள் முன் வரவேண்டும்.

"குடி குடியை கெடுக்கும் என்பார்கள்" ஆனால் இந்த சைத்தான்கள் தங்கள் குடியினால் தன் குடியை மட்டுமல்ல பிறர் குடியையும் கெடுக்கும் இந்த விஷகிருமிகளை உங்கள் தெருவைவிட்டு விரட்ட புது தெருவாசிகளே சிந்தியுங்கள்..!

Posted by Diary...