எச்சரிக்கை செய்யப்பட்டது அவனுக்கு அலச்சியபடுத்தினான் அவன் !
உறுதி செய்யப்பட்ட உண்மை என்று சொல்லப்பட்டது அலச்சியபடுத்தினான் அவன் !
நிழல் போல தொடர்ந்து வரும் என்று சொல்லப்பட்டது அலச்சியபடுத்தினான் அவன் !
திரைப்படம் பார்த்துவிட்டு இறைபள்ளியை கடந்து சென்ற பொழுது அவன் முன் தோன்றியது அது
உள்ளம் படபடக்க , குருதி கொந்தளிக்க பரிதபதக்குரிய அவன் வினவினான் நீ யார் ?
உண் நிழல் போல் தொடர்ந்து வந்த நான் இன்று உன் முன் நிற்பதற்காக உத்தரவுபிறபிகபட்டுள்ளது
நான்தான் உன்னுடைய மரணம் ! என்று சொன்னவுடன்
இறுதி முச்சு இழுபதற்கு முன் எதிரே தோன்றிய இறை பள்ளியின்
நுழைவாயில் எழுதப்பட்ட ஒரு வாசகத்தை கண்டான்
உங்களுக்காக தொழுகை வைப்பதற்கு முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்
எச்சரிக்கை !!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment